திருச்சி அருகே 9 வயது சிறுமி மர்ம மரணம் - சந்தேகத்தின் பேரில் சிறுவனிடம் விசாரணை

திருச்சி அருகே 9 வயது சிறுமி தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே 9 வயது சிறுமி மர்ம மரணம் - சந்தேகத்தின் பேரில் சிறுவனிடம் விசாரணை
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 9 வயதான சிறுமி தன் வீட்டருகே உள்ள மல்லிகை தோட்டத்தில் தலையில் பலத்த காயத்தோடு கிடந்தார். 

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் அருகில் இருந்தவர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த அந்த சிறுமி மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். ஆனால் சிறுமியின் மரணத்திற்கு காரணம் என்ன? என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்னும் அதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறுமியின் சடலம் கிடந்த இடம் அருகே சிறுவனின் உடைகளும் மீட்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 

சிறுமியை பற்றி தகவல் கொடுத்த அந்த சிறுவனின் நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த உடையும், தகவல் கொடுத்த சிறுவனின் உடை என்பதால் போலீசார் சிறுவனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். தலையில் கொடூரமாக அடிக்கப்படும் அளவிற்கு என்ன சம்பவம் நடந்தது? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்