துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
x
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் பன்னீர்செல்வத்துக்கு  முழுஉடல் பரிசோதனை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அவரது உடல் நிலை குறித்த அறிக்கைகள் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்