சாலை விபத்தில் இறந்த பெண் காவலர் குடும்பத்திற்கு உதவி - சக காவலர்கள் ரூ.12 லட்சம் வழங்கினர்

சாலை விபத்தில் இறந்த ஆயுதப்படை பெண் காவலர் குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாயை சக காவலர்கள் வழங்கினர்.
சாலை விபத்தில் இறந்த பெண் காவலர் குடும்பத்திற்கு உதவி - சக காவலர்கள் ரூ.12 லட்சம் வழங்கினர்
x
சாலை விபத்தில் இறந்த ஆயுதப்படை பெண் காவலர் குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாயை சக காவலர்கள் வழங்கினர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா, ஆயுதப்படை காவலராக, சென்னையில் பணியாற்றி வந்தார். கடந்த 5 தேதி காமராஜர் சாலையில் உள்ள கண்ணகி சிலை அருகே டேங்கர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருக்கு சக காவலர்கள் வாட்ஸ் அப் மூலமாக 12 லட்சத்து 22 ஆயிரத்து 955 ரூபாய் சேகரித்தனர். அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அந்த நிதியை பெற்றோரிடம் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்