காணாமல் போன இளம்பெண் மீட்பு - பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த குணப்பிரியா என்ற பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலை பார்த்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த குணப்பிரியா என்ற பெண், சென்னையில் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலை பார்த்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வீட்டிலிருந்து காணாமல் போனதாக குணப்பிரியாவின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். அப்போது போலீசார் விசாரணை நடத்திய போது திருமணமான ராஜா உடன் காதல் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் குணப்பிரியா வசித்தது தெரியவந்தது. இதனையடுத்து குணப்பிரியாவை மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Next Story