கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்த பெண் - வீட்டில் எரிந்த நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி
கொடைக்கானல் நகர் பகுதியில் வீட்டில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஜெரீனா பேகம் என்ற பெண் கணவரை பிரிந்த நிலையில், தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடைய வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள், தீயில் கருகிய நிலையில் கிடந்த ஜெரீனா பேகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, அனுப்பினர். ஜெரீனா பேகம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் பிரச்சினையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story