3 டன் வெல்லம் சாராய வியாபாரிக்கு விற்பனை - குற்றம் நிரூபிக்கப்பட்டதால் டிஐஜி அதிரடி

வேலூரில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்த வெல்லத்தை சாராய வியாபாரிக்கு விற்பனை செய்த பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
3 டன் வெல்லம் சாராய வியாபாரிக்கு விற்பனை - குற்றம் நிரூபிக்கப்பட்டதால் டிஐஜி அதிரடி
x
வேலூர், வேப்பங்குப்பம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்ட லட்சுமி, இம்மாத தொடக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, முத்துக்குமரன் மலை அடிவாரத்தில் நின்று கொண்டு இருந்த வேனில் இருந்து 3 ஆயிரம் கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரிடம் பிடிபட்ட வெல்லத்தை  சாராய வியாபாரிக்கு காவல் ஆய்வாளர் லட்சுமி, விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய டி.ஐ.ஜி. காமினி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லட்சுமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்