கொரோனா மருத்துவ கழிவுகள் "அறிவியல் ரீதியாக அழிக்க வேண்டும்" - மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றிட திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா மருத்துவ கழிவுகள் அறிவியல் ரீதியாக அழிக்க வேண்டும் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
x
எரித்து அழிக்கப்பட வேண்டிய முக கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கழிவுகளை, வழக்கமான குப்பைகள் போலவே புதைக்கப்படுவதாக ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் கொரோனா பரவும் என எச்சரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின், குப்பைகளை அள்ளும் பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணம் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். அறிவியல் ரீதியாக கழிவுகள் அழிக்கப்பட்டன என்பதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்