"தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு" - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மற்றும் நெல்லை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதிக பட்சமாக 42 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக கூடும் என்பதால் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்