மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையம் பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க இரண்டு ஆயுதப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது
x
வேலூர் மாவட்டம்  முள்ளிபாளையம்  பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க இரண்டு ஆயுதப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல் தப்பிச் செல்ல முயன்றது. மேலும் அவர்கள் போலீசார் மீது பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை எரிந்து தாக்கியுள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து தப்பி சென்ற போலீசார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்