கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பினர் - உற்சாக வரவேற்பு அளித்த டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பினர் - உற்சாக வரவேற்பு அளித்த டிஜிபி சைலேந்திரபாபு
x
தமிழகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 25 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இந்த 25 தீயணைப்பு வீரர்களில்  தற்போது 11 பேர் பூரண குணமடைந்து இன்று மீண்டும் பணிக்கு திரும்பினர். இவர்களை தீயணைப்பு துறையின் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளித்தார். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பழங்களையும் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்