கார் மோதியதில் 50 ஆடுகள் உயிரிழப்பு - ஆடுகளின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து வெண்ணங்குழி கிராமத்தில் கார் மோதியதில் 50 ஆடுகளுடன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் மோதியதில் 50 ஆடுகள் உயிரிழப்பு - ஆடுகளின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலி
x
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து  வெண்ணங்குழி கிராமத்தில் கார் மோதியதில் 50 ஆடுகளுடன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.   தேவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜர் ஊர் ஊராக சென்று ஆடு மேய்த்து வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடு மேய்த்துக் கொண்டு வந்த போது, நாய்கள் குரைத்தால் ஆடுகள் அங்குமிங்கும் மிரண்டு ஓடியுள்ளன. அப்போது அங்கு வந்த கார் மோதியதில் 50 ஆடுகள் உயிரிழந்தன. இதில், காமராஜரும் உயிர் இழக்க, படுகாயம் அடைந்த ஆடுமேய்க்கும் சேகர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்