சென்னையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்? - கொரோனா பாதிப்பால் நடவடிக்கை என தகவல் - மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்

சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்? - கொரோனா பாதிப்பால் நடவடிக்கை என தகவல் - மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்
x
தமிழகம் முழுவதும் 72 மையங்களில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 27ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையைப் பொறுத்த வரையிலும் 2 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தற்போது  கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், சென்னையில் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளப் போவதில்லை என  முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில், விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Next Story

மேலும் செய்திகள்