தமிழகத்தில், நாளை முதல் ஆட்டோ மற்றும் ரிக்ஷாக்களை இயக்க அரசு அனுமதி
தமிழகத்தில், நாளை முதல் ஆட்டோ மற்றும் ரிக்ஷாக்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நோய் கட்டுப்பாடு பகுதியை தவிர பிற இடங்களில், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோ, ரிக்ஷாக்களை இயக்கலாம் என தெரிவித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் வைத்து, வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் பயணிகள் பயன்படுத்தும் வகையில், சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ, ரிக்ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
Next Story