கிணற்றில் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு - மீட்க வந்த அதிகாரியிடம் பாசம் காட்டிய நாய்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் உள்ள கிணற்றில் தெருநாய் ஒன்று திடீரென விழுந்தது.
கிணற்றில் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு - மீட்க வந்த அதிகாரியிடம் பாசம் காட்டிய நாய்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் உள்ள கிணற்றில் தெருநாய் ஒன்று திடீரென விழுந்தது. 40 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 2 அடி தண்ணீர் இருந்ததால் நாய் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதைப் பார்த்த மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். அப்போது கிணற்றில் இறங்கிய தீயணைப்பு துறை அதிகாரியிடம் எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக ஒத்துழைப்பு வழங்கியது. கயிறு கட்டி நாய் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தன் நன்றியை வாலாட்டி வெளிப்படுத்திய காட்சி பார்ப்போரை நெகிழ வைத்தது,

Next Story

மேலும் செய்திகள்