வண்ண மலர்களை பார்வையிட்ட தூய்மைப் பணியாளர்கள் - தூய்மை பணியாளர்களுக்கு பூங்கொத்து கொடுத்து கவுரவம்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களை காண நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களை காண நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் கொரோனா பணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலர்க்கொத்து கொடுத்து பூங்கா நிர்வாகம் தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மலர்களை பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story