அதிமுக முன்னாள் பெண் நிர்வாகி கொடூர கொலை - முன்விரோதத்தால் நடந்த பயங்கரம்

சேலம் அருகே அதிமுக முன்னாள் நிர்வாகியான பெண் முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் பெண் நிர்வாகி கொடூர கொலை - முன்விரோதத்தால் நடந்த பயங்கரம்
x
சேலம் மாவட்டம் சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தா. இவர் பனமரத்துப்பட்டி ஒன்றிய முன்னாள் மகளிர் அணி தலைவியாகவும், பெரமனூர் கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் தன் மருமகளை அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த ரமேஷ் என்ற இளைஞர் மிளகாய்த்தூளை சாந்தாவின் மீது கொட்டியதோடு கல்லை தூக்கிப்போட்டும், கத்தியாலும் குத்தினார். இதில் படுகாயமடைந்த நிலையில் சாலையில் விழுந்த சாந்தா சுற்றி இருந்தவர்களிடம் தண்ணீர் கேட்டு துடித்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது உறுதியானது. 

Next Story

மேலும் செய்திகள்