கஞ்சா போதையில் ஆட்டம் காட்டிய இளைஞர்கள் - முதலமைச்சரின் கான்வாய்க்குள் புகுந்த‌தால் பரபரப்பு

கஞ்சா போதையில் முதலமைச்சரின் கான்வாய்க்குள் புகுந்து ஆட்டம் காட்டிய இளைஞர்கள் பிடிக்க முயன்ற காவலரின் காலில் இருசக்கரவாகனத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கஞ்சா போதையில் ஆட்டம் காட்டிய இளைஞர்கள் - முதலமைச்சரின் கான்வாய்க்குள் புகுந்த‌தால் பரபரப்பு
x
நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது அலுவலக பணிகளை முடித்துவட்டு தலைமை செயலகத்தில் இருந்து மதியம் 2 மணி அளவில் கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கரவானத்தில் வந்த 2 இளைஞர்கள்,திடீரென  முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய்க்குள் புகுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒலி பெருக்கி மூலம் உதவி ஆணையர்  இளைஞர்களை எச்சரித்த நிலையில், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பைக்கில் சாகசங்கள் செய்த படி அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தனர். இதையடுத்து துணை ஆணையர் அவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.  போலீசாருக்கு ஆட்டம் காட்டிய இளைஞர்களை நேப்பியர் பாலம் அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிடிக்க முயன்றார். அப்போது அவர் மீது பைக்கை ஏற்றிவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞர்கள், அருகே வந்த தம்பதிகள் மீதும் மோதி தடுமாறி விழுந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்