"அச்சு ஊடக துறையை காப்பாற்றுங்கள்" - பிரதமருக்கு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

அச்சு ஊடக துறையை காப்பாற்றுங்கள் என்று பிரதமருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
அச்சு ஊடக துறையை காப்பாற்றுங்கள் - பிரதமருக்கு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
x
விளம்பரம் மற்றும் விநியோகம் மூலம் வரும் வருவாய் கொரோனா ஊரடங்கால் வெகுவாக முடங்கிப் போன நிலையில், உற்பத்தி செலவை கூட எதிர்க்கொள்ள இயலாத நிலைக்கு பத்திரிகை துறை தள்ளப்பட்டு உள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகை துறை எதிர்க்கொண்டு வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க மூலப் பொருட்கள் மீதான சுங்க வரியில் ஓராண்டுக்கு சலுகை, விளம்பர நிலுவை தொகைகளை உடனடியாக வழங்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதவிர, விளம்பர கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்துவதுடன், அரசின் அறிவிப்புகள் மற்றும் நோட்டீஸ் தொடர்பான விளம்பரங்களை அதிக அளவில் அச்சு ஊடகங்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்