பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகி மாரியப்பன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கு, நீதிபதிகள்  சுந்தரேஷ் மற்றும் ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதம் தான் நடைபெறுகிறது எனவும், ஆனால்  பத்தாம் வகுப்பு தேர்வு அவசரஅவசரமாக நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். கொரோனா கட்டுப்பாட்டு  பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது என்று மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்த உள்ளதாக குறிப்பிட்டார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்தப் போகிறீர்கள்,என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , நோய் கட்டுப்பாட்டு உள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்