"கடைகளை திறப்பதில் பாகுபாடு" - காவல்துறை மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு

சென்னை பாரிமுனையில் கடைகளை திறப்பதில் பாகுபாடு காட்டுவதாகக் கூறி வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகளை திறப்பதில் பாகுபாடு - காவல்துறை மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு
x
சென்னை பாரிமுனையில் கடைகளை திறப்பதில் பாகுபாடு காட்டுவதாகக் கூறி, வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பந்தர் தெருவில் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். வியாபாரிகளின் போராட்டத்தை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், அனைத்து கடைகளையும் மூட சொல்லி அறிவுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்