புதுக்கோட்டையில் வசிப்பவர்களுக்கு கொரோனா இல்லை - வெளிநாடு, மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கே கொரோனா

புதுக்கோட்டையில் வசித்து வரும் ஒருவருக்கு கூட இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை.
புதுக்கோட்டையில் வசிப்பவர்களுக்கு கொரோனா இல்லை - வெளிநாடு, மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கே கொரோனா
x
புதுக்கோட்டையில் வசித்து வரும் ஒருவருக்கு கூட இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதுவரை புதுக்கோட்டையில் கொரோனாவால் 17 பாதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த 17 பேரும் புதுக்கோட்டையில் வசித்து வருபவர்கள் அல்ல. அனைவருமே வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் எடுத்து வரும் நடவடிக்கையே இதற்கு காரணம் என மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்