கடல் நீரால் அரிக்கப்பட்டு வரும் கரைப்பகுதி - தடுப்புச்சுவர் அமைக்க அரசுக்கு கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட குந்துகால் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கரைப்பகுதி கடல் நீரால் அரிக்கப்பட்டு வருகிறது.
கடல் நீரால் அரிக்கப்பட்டு வரும் கரைப்பகுதி - தடுப்புச்சுவர் அமைக்க அரசுக்கு கோரிக்கை
x
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட குந்துகால் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால்  கரைப்பகுதி கடல் நீரால்  அரிக்கப்பட்டு வருகிறது.  கரையில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இருந்த மரங்கள் அனைத்தும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில், குந்துகால் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் கடல் அரிப்பால் சேதம் அடைவதற்குள் அப்பகுதியில் அரசு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்