மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற கும்பல் - ஈரோடு அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய சென்றவர்களை தடுத்து நிறுத்திய 2 பேர் மீது மண்ணை கொட்டி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதியில் கோயில்களில் பூஜை செய்யும் பூசாரிகள் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அம்மன்கோயில்பதியில் உள்ள இடத்தை மயானபூமியாக பயன்படுத்தி வந்த நிலையில் லோகநாதன் என்பவர் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் லோகநாதன் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்துள்ளார். இதை தடுக்க சென்ற ஜெயவேல் மற்றும் கிரி என்பவர் மீது டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 2 பேரையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story