சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் எம்.எல்.ஏ கருணாஸ் புகார்

பிற சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் கருணாஸ் புகார் அளித்தார்.
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் எம்.எல்.ஏ கருணாஸ் புகார்
x
பிற சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டிஜிபி அலுவலகத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், 
தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவது வேதனை அளிப்பதாக கூறினார்.  கொரோனா நோயால் மக்கள் அனைவருமே மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், இதுபோன்று வீடியோ வெளியிடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கருணாஸ் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்