ஒரே தெருவில் 51 பேர் கொரோனாவால் பாதிப்பு - இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை ராயபுரம் மண்டலம் காக்கா தோப்பு பகுதியில் ஒரே தெருவில் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே தெருவில் 51 பேர் கொரோனாவால் பாதிப்பு - இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி
x
சென்னை ராயபுரம் மண்டலம், காக்கா தோப்பு பகுதியில், ஒரே தெருவில் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, காக்கா தோப்பு பகுதியில், ஒரே தெருவில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டிருந்த நிலையில், இன்று புதிதாக 6 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் தனி கவனம் செலுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்