மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்
மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும், காற்றின் வேகம் கூடும் என்பதால் மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கூறிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story