கணவனை கல்லால் அடித்துக் கொன்ற பெண் - கீழே விழுந்து கணவர் உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலம்

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலி பகுதியில் வசித்து வந்தவர் அண்ணாமலை.
கணவனை கல்லால் அடித்துக் கொன்ற பெண் - கீழே விழுந்து கணவர் உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலம்
x
கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலி பகுதியில் வசித்து வந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி பிரியா. இருவரும் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை வெடித்ததில் அருகே இருந்த கல்லை எடுத்து கணவர் தலையில் போட்டு கொலை செய்துள்ளார் பிரியா. பின்னர் தன் சொந்த ஊருக்கு சடலத்தை எடுத்துச் சென்ற பிரியா, கணவர் கீழே விழுந்து இறந்து போனதாக கூறி நாடகமாடியுள்ளார். இவரின் செய்கையால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது பிரியாவும் செல்வராஜூம் தப்பி ஓட முயன்ற நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்