"கொரோனாவுக்கு பின் காலம் கடுமையானதாக இருக்கும்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கருத்து

கொரோனாவுக்கு பிறகான காலம் கடுமையானதாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பின் காலம் கடுமையானதாக இருக்கும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கருத்து
x
கொரோனாவுக்கு பிறகான காலம் கடுமையானதாக இருக்கும் என்றும், இனி வழக்குகளின் தன்மையும் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற பார் கவுன்சில் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வேலையின்றி தவிக்கும் 12 ஆயிரத்து 251 இளம் வழக்கறிஞர்களுக்கு, தலா 4000 ரூபாய் வீதம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்