கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக புகார் - செந்தில் பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக புகார் - செந்தில் பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
x
கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை கூட்டத்திற்கு திமுக எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 12ஆம் தேதி செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். இதனிடையே தமது அலுவலகத்துக்குள் புகுந்த செந்தில் பாலாஜி தன்னை மிரட்டியதாக ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்