வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு - வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் ஈர்ப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு - வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு
x
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் ஈர்ப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்கான வியூகங்களை வகுப்பதற்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்த குழுவின் முதல் கூட்டம், தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்