முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000 - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், நலவாரிய உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்யாதவர்கள், தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று நிவாரணம் பெறலாம் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்