ஆவடியில் 127 பேருக்கு கொரோனா தொற்று - தொற்று உயர்வதால் அதிர்ச்சியில் மக்கள்
சென்னையை அடுத்துள்ள ஆவடியில் இதுவரை 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை அடுத்த ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் கோயம்பேடு சந்தை தொடர்புடைய 127 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆவடி ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவல் குடியிருப்பு சேர்ந்தவர்கள் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி நோய் பரவலை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
Next Story