கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் - கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் மீது வழக்குப் பதிவு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சேவூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பஷீர்.
கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் - கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் மீது வழக்குப் பதிவு
x
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சேவூர் கிராம நிர்வாக அலுவலராக
பணிபுரிபவர் பஷீர். இவர் அருகிலுள்ள ஏ.அகரம்  கிராமத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இந்நிலையில்,கோயம்பேடு சந்தையில் இருந்து,அந்த ஊருக்கு வந்த 29 பேரில்,13 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் மணிமாறன் என்பவர், தன்னை தனிமைப்படுத்தியதற்கு, பஷீர்தான் காரணம் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது தொடர்பாக
போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்