பிரதமர் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக புகார் - திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் மீது வழக்கு பதிவு

திமுக குமரி மேற்கு மாவட்ட செயலாளரான மனோ தங்கராஜ் பிரதமரின் அறிக்கைகள் தொடர்பாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
பிரதமர் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக புகார் - திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் மீது வழக்கு பதிவு
x
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக குமரி மேற்கு மாவட்ட செயலாளருமான மனோ தங்கராஜ், மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் பிரதமரின் அறிக்கைகள் தொடர்பாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தவறானது என சுட்டிக்காட்டி, வீடியோக்களும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மீது அவதூறு பரப்பியதாக கூறி இவர் மீது  நாகர்கோவில் மாநகர பாஜக தலைவர் நாகராஜன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் மனோ தங்கராஜ் மீது 2  பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்