"மக்கள் அளித்த மனுக்களை தலைமை செயலாளர் பொருட்படுத்தவில்லை" - திமுக எம்பிக்கள் குற்றச்சாட்டு

மக்களிடம் பெற்ற மனுக்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்திடம் வழங்க சென்ற போது தாங்கள் உதாசீனப்படுத்தப்பட்டதாக திமுக எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்கள் அளித்த மனுக்களை தலைமை செயலாளர் பொருட்படுத்தவில்லை - திமுக எம்பிக்கள் குற்றச்சாட்டு
x
மக்களிடம் பெற்ற மனுக்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்திடம் வழங்க சென்ற போது தாங்கள் உதாசீனப்படுத்தப்பட்டதாக திமுக எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்த, திமுக எம்பிக்கள் 
ஒன்றிணைவோம் வா திட்டத்தில் மக்களிடம் பெறப்பட்ட ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டதற்கு தலைமை செயலாளர் உரிய மரியாதை தராமல் தங்களை அவமானம் செய்ததாக திமுக எம்பிக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்