கொரோனா தடுப்பு பணி - கைதிகளை பயன்படுத்த கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்புக்கும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைக் கைதிகளை பயன்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கொரோனா தடுப்பு பணி - கைதிகளை பயன்படுத்த கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்புக்கும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைக் கைதிகளை பயன்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வில், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைதிகளை சிறைக்கு வெளியில் பணியில் அமர்த்துவது என்பது அபாயகரமானது எனவும், அவர்கள் தப்பியோட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்