தருமபுரம் ஆதீனத்தின் கோயிலில் விழா - கோயில், மடத்து நிர்வாகிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்ம தீர்த்தக்கரையில் திருமுலைப்பால் விழா நடைபெறும் .
தருமபுரம் ஆதீனத்தின்  கோயிலில் விழா - கோயில், மடத்து நிர்வாகிகள் பங்கேற்பு
x
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 
சட்டைநாத சுவாமி கோயிலில்  ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்ம 
தீர்த்தக்கரையில் திருமுலைப்பால் விழா நடைபெறும் . ஊரடங்கு காரணமாக 
இந்த ஆண்டு விழா நடைபெறவில்லை. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி திருஞானசம்பந்தரை மலைக்கோவிலில் உள்ள தோணியப்பர் சன்னதியில் எழுந்தருள செய்து  தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் உமையம்மை திருஞானசம்பந்தருக்கு தங்கக் கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ,, ஓதுவார்கள் தேவார பதிகம் பாட , அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோயில் மற்றும்  மடத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்