15 ஆயிரம் பேருக்கு தலா 10 கிலோ அரிசி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
சிவகாசியில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, அதிமுக சார்பில் தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
சிவகாசியில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, அதிமுக சார்பில் தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். மேலும், 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தொடருமா என்பதை, பிரதமரும், முதலமைச்சரும் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
Next Story