மதுரை : பசியால் 15க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், போதிய உணவு கிடைக்காததால், 15க்கும் மேற்பட்ட குரங்குகள் பசியால் உயிரிழந்தன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், போதிய உணவு கிடைக்காததால், 15க்கும் மேற்பட்ட குரங்குகள் பசியால் உயிரிழந்தன. இது குறித்து தகவல் அறிந்த, திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதனகலா, சேதமடைந்த காய்கறி மற்றும் பழங்களை தந்து உதவுமாறு வியாபாரிகளிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அந்த காய்கறிகளை அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குரங்குகள் மற்றும் மயில்களுக்கு வழங்கி வருகிறார்.
Next Story