முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் மெகராஜ் முன்னிலையில், அமைச்சர் தங்கமணியிடம் இந்த நிதி வழங்கப்பட்டது. இதே போல் நாமக்கல் மாவட்ட தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் 1 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை அமைச்சர் தங்கமணியிடம் வழங்கினர்.
Next Story