போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்...

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி என்பவர் பணியின்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்...
x
சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி என்பவர் பணியின்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலத்தை சேர்ந்த அவருக்கு மனைவியும் ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையே,  அருண்காந்தி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடி சூழ்ந்த இந்த ஊரடங்கு காலத்தில், காவலர்களுக்கு பணிச் சுமை மற்றும் மன அழுத்தம் ஏற்படாதவாறு தமிழக அரசும் அக்கறை காட்ட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்