"கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அடையாள அட்டை" - கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம் வலியுறுத்தல்
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசும், காவல்துறையும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கு உத்தரவால், மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில், அவர்களுக்கு 24 மணி நேர கேபிள் டிவி வசதி வழங்கி வரும் பணியாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக, அந்த சங்கத்தின் மாநில தலைவர் ஷகிலன் குற்றம் சாட்டியுள்ளார். கேபிள் டிவி, அத்தியாவசிய பட்டியலில் இருப்பதால், கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசும், காவல்துறையும், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story