"திருவேற்காடு அம்மா உணவகத்தில் முட்டை, வாழைப்பழம்" - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

ஆதரவற்றோருக்கு, அம்மா உணவகத்தில் சத்தான உணவு கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
திருவேற்காடு அம்மா உணவகத்தில் முட்டை, வாழைப்பழம் - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
x
ஆதரவற்றோருக்கு, அம்மா உணவகத்தில் சத்தான உணவு கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சென்னை அடுத்த திருவேற்காடு அம்மா உணவகத்தில், ஆதரவற்றோர் மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதில், இன்று முதல் இலவச முட்டை மற்றும் வாழைப்பழம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று தொடங்கி வைத்த அமைச்சர் பாண்டியராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருவள்ளுர் மாவட்டத்தில் நூறு ரூபாய்க்கு காய்கறிகள் கொடுப்பதாக கூறினார். விலையை கட்டுக்குள் வைக்கவும், சமூக விலகலை கடைபிடிக்கவும் வீட்டிற்கே சென்று கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்