கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை : தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கல்லூரி மாணவர்  கத்தியால் குத்தி கொலை : தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது
x
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நண்பர்  கருப்பசாமி நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் இசை வாத்தியம் வைத்துள்ள கணபதி சங்கர், கணேஷ் குமார், செந்தில் குமார் ஆகியோரை நாடாமல் வேறொரு இசைக் குழுவை தாமரைக்கனி நாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணபதி சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாமரைக்கனி-யை அடித்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில்  தாமரைக்கனி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கணபதி சங்கரின் தந்தை சக்தி கணேஷ், கணேஷ் குமார், செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை அண்ணாமலை ஈஸ்வரன், ஜெய் கணேஷ் உள்ளிட்ட 6 பேரை  போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்