நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார்
கொரோனா தொற்றுக்கு நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் இன்று குணமடைந்தார்.
கொரோனா தொற்றுக்கு நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் இன்று குணமடைந்தார். இதனையடுத்து அவர் வீடு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்,சமூக பரவல் நிலையை அடைந்ததா என கண்டறிய இன்னும் இரண்டு தினங்களாகும் என தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்காக மாவட்டத்தில் 3 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story