"எம்.எல்.ஏ-க்கள் நிதி - அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்

சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியை அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ-க்கள் நிதி - அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்
x
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பரிந்துரையின் படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும், இதனை அறியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறை கூறியுள்ளதாகவும் தெரவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ஒரு கோடி ரூபாயை மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்