நடமாடும் சிறப்பு காய்கறி அங்காடி : வியாபாரிகள் ஒத்துழைப்பு தர அறிவுறுத்தல்
சென்னை மாநகரில் நடமாடும் சிறப்பு காய்கறி அங்காடி திட்டத்தை, விரிவுப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகரில் நடமாடும் சிறப்பு காய்கறி அங்காடி திட்டத்தை, விரிவுப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். முன்னதாக, சோதனை அடிப்படையில் நடமாடும் காய்கறிகள் வாகனத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் கார்த்திகேயன் அறிமுகம் செய்து வைத்தார்
Next Story