ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்
ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குடும்பத்தினருடன் தீபம் ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் கடைகள் மூலம், இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இனிவரும் நாட்கள் கொரோனாவை விரட்டும் நாளாக அமைய வேண்டும் என வேண்டுவதாக கூறினார்.
Next Story