உணவின்றி தவித்தவர்களுக்கு சில மணிநேரத்தில் உதவி பொருட்கள் வழங்கிய அதிகாரிகள்
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உணவின்றி தவித்து வந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சரின் டிவிட்டர் சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உணவின்றி தவித்து வந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சரின் டிவிட்டர் சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதேபோன்று ஆந்திராவுக்கு வேலைக்கு சென்ற பெரம்பலூரை சேர்ந்த 25 தொழிலாளர்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து சில மணிநேரங்களிலேயே இரு இடங்களில் உள்ளவர்களுக்கும் அதிகாரிகள் மூலம் முதலமைச்சர் உதவி பொருட்களை வழங்கினார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கை பாராட்டை பெற்றுள்ளது.
Next Story