கேள்விக் குறியான சமூக விலகல் - இருசக்கர வாகனங்களை சரமாரியாக அடித்து உடைத்த போலீஸ்

தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரின் வாகனங்களை போலீசார், சரமாரியாக அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேள்விக் குறியான சமூக விலகல் - இருசக்கர வாகனங்களை சரமாரியாக அடித்து உடைத்த போலீஸ்
x
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், தர்மபுரி நகர் பகுதியில், ஊரடங்கு உத்தரவையும் மீறி ஏராளமானோர் வெளியில் சுற்றுகின்றனர். இந்நிலையில், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சவாகனங்களில் வருவோரை போலீசார் எச்சரித்தனர். அவர்களது வாகனங்களின் கண்ணாடி, இண்டிகேட்டர், முகப்பு விளக்கை போலீசார் சிலர்  சரமாரியாக அடித்து உடைத்தனர். இந்தச் சம்பவத்தால், அத்தியாவசிய தேவைக்கு வந்தோரும் பாதிக்கப்பட்டனர். பலர் நொந்தபடியே வீடு திரும்பினர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு அறிவுறுத்தியும் அப்பகுதி வாகன ஓட்டிகள் கேட்காததே இந்த அதிரடிக்கு காரணம் என பொதுநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்